ஒரே படத்தில் ஜி.வி.பிரகாஷ்-சித்தார்த்
விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் சசி தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்கவுள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்நிலையில் தனது அடுத்த படத்தின் நாயகர்களை அவர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
சசியின் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சித்தார்த் நடிக்கவுள்ளனர். இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தில் சமீபத்தில் நடித்த முடித்த ஜி.வி.பிரகாஷ், விரைவில் ‘புரூஸ்லீ’ படத்தையும் முடிக்கவுள்ளார். இதன்பின்னர் சசி படத்தில் நடிப்பார் என தெரிகிறது. ஜில் ஜங் ஜக்’ படத்திற்கு பின்னர் சித்தார்த் நடிக்கும் தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.