shadow

peris and sushmaஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் இன்று டெல்லியில் இலங்கை வெளியுறவு அமைச்சர் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இன்று டெல்லிக்கு வருகை தரும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர்களால் கைது செய்யப்படும் விவகாரம், கச்சத்தீவின் உரிமை உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஐ.நா. விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் குறித்தும், அதற்கு இலங்கையின் நிலைப்பாடு குறித்து சுஷ்மா ஸ்வராஜிடம் ஜி.எல். பெரீஸ் எடுத்துரைப்பார் என்றும் கூறப்படுகிறது. சுஷ்மாவை சந்தித்த பின்னர் இன்று மாலை ஜி.எல்.பெரீஸ் இலங்கை திரும்புகிறார்.

Leave a Reply