shadow

ஓபிஎஸ் அணிக்கு ஜி.கே.வாசன் ஆதரவு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது. ஒருபக்கம் தினகரன் அணியினர் ஓட்டு ஒன்றுக்கு ரூ.4000 கொடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் இன்னொருபுரம் ஓபிஎஸ் அணிக்கு பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் ஆதரவு பெருகி வருகிறது.

இந்த நிலையில் இன்று ஓபிஎஸ் அவர்கள் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசனின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் ஆகியோர் இருந்தனர்

வரும் 12-ம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம் அணியின் மதுசூதனன். அவருக்கு ஆதரவு தரக்கோரி, ஜி.கே.வாசனிடம் ஓ.பி.எஸ் வேண்டுகோள் வைத்தார். ஓபிஎஸ் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட வாசன் இன்று முதல் தாமகவினர் மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார்கள் என்றும், நாளை மறுநாள் ஓபிஎஸ் உடன் இணைந்து ஆர்.கே.நகரின் தான் வாக்கு சேகரிக்கவுள்ளதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Leave a Reply