கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து பிரிந்த ஜி.கே.வாசன், நேற்று திருச்சியில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானதாக முறைப்படி அறிவித்தார். நேற்று நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன் தங்கள் கட்சிக்கு மூப்பனாரின் சைக்கிள் சின்னம் மீண்டும் கிடைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
திருச்சி பொன்மலை “ஜி’ கார்னரில் நேற்று நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சித் தொடக்க விழாவில், தொண்டர்கள் ஜி.கே.வாசனுக்கு வீரவாள் பரிசளித்தனர். அந்த வாளை கையில் ஏந்தி அவர் போஸ் கொடுத்தபோது தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த கூட்டத்தில் உடன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மா. ராஜசேகரன். உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜி.கே.வாசனின் புதிய தமிழ் மாநில காங்கிரஸ் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு புதிய கூட்டணியை அமைத்து போட்டியிடும் என்றும், ஜி.கே.வாசன் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பார் என்றும் தொடக்கவிழாவில் பலர் பேசிக்கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.