முன்னாள் மத்திய கப்பல் போக்குவரத்து மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ஜி.கே.வாசனின் மாமனார் டாக்டர் லட்சுமி நாராயணன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 77.
மரணம் அடைந்த லட்சுமி நாராயணன் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ஆழ்வார்பேட்டை வாரண்ட் ரோட்டில் உள்ள ஜி.கே.வாசனின் வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஜி.கே.வாசன் வீட்டுக்கு சென்று லட்சுமி நாராயணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் ஜி.கே.வாசன் மற்றும் அவரது மனைவி கணிதா வாசன் ஆகிய இருவருக்கும் அவர் ஆறுதல் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் மத்திய மந்திரிகள் ஜெயந்தி நடராஜன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ஜான் ஜேக்கப், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அனுராதா, அபி, சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம் உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று மாலை லட்சுமி நாராயணின் இறுதி சடங்கு நடக்கிறது. அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின்சார இடுகாட்டில் தகனம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.