பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கருக்கு நேற்று மும்பையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அவர் பாடிய ஆயே மேரே வட்டான் கே லோகோன் என்ற பாடல் 51 வருடங்கள் தாண்டியும் இன்னும் புகழ்பெற்று விளங்குவதால் அவருக்கு இந்த பாராட்டுவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மோடி, லதா மங்கேஷ்கர் இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றும் அவரை பேணி பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்றும் பேசினார்.
மேலும் அவர் இந்தியாவில் மட்டுமே இதுவரை போர் நினைவு சின்னங்களே இல்லை என்றும் அந்த குறையை பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்றவுடன் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த விழாவில் லட்சக்கணக்கான பாரதிய ஜனதா தொண்டர்கள் கலந்துகொண்டு, மோடி வாழ்க, பாரதிய ஜனதா வாழ்க என்றும் கோஷமிட்டனர். அங்கு கூடியிருந்த பொதுமக்களும் ஒருவரை ஒருவர் மோடிக்கு வாக்களியுங்கள் என்று கூறிக்கொண்டார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.