இன்று இரண்டு மாநகராட்சிக்கு முடிந்தது
சென்னை உள்பட 3 மாநகராட்சிகளுக்கான முழு ஊரடங்கு இன்றுடன் முடிகிறது. கொரோனா பரவலைத் தடுக்க இந்த முழு ஊரடங்கு கடந்த ஞாயிறு முதல் அமலுக்கு வந்த நிலையில் மூன்று மாநகராட்சியில் இன்றுடன் முழு ஊரடங்கு முடிவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆனால் திருப்பூர், சேலம் மாநகராட்சிகளுக்கு நேற்று வரை 3 நாட்கள் முழு ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து அங்கு வழக்கமான ஊரடங்கு அமலில் உள்ளது.
சென்னை, கோவை, மதுரை உள்பட 3 மாநகராட்சிகளுக்கு 4 நாட்கள் முழு ஊரடங்கு நாளை முடிவடைந்தாலும் சென்னையில் மிக அதிகமாக கொரோனா பரவுவதால் முழு ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Leave a Reply
You must be logged in to post a comment.