நாளை முதல் பள்ளிகள் விடுமுறை: அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் ஏற்கனவே ஜனவரி 2 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளும் நாளை முதல் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக பள்ளிகளில் கடந்த சில நாட்களாக அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்த நிலையில் அந்த தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை என அனைத்தும் சேர்த்து நாளை முதல் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை எனவே பள்ளி கல்லூரி ஆகிய இரண்டுமே தற்போது விடுமுறை ஆகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த விடுமுறை காலத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Leave a Reply