நாளை முதல் ‘சர்கார்’ டப்பிங்: விஜய் டப்பிங் செய்கிறார்
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘சர்கார்’ படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் இந்த படத்தின் பாடல் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஜூலை 23 முதல் அதாவது நாளை திங்கட்கிழமை முதல் தளபதி விஜய் இந்த படத்தின் தனது பகுதிக்கான டப்பிங் பணியை தொடரவுள்ளார். அவர் ஓரிரு நாட்களில் டப்பிங்கை முடித்துவிடுவா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து ‘சர்கார்’ படக்குழு அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், அங்கு பத்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது
விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் இந்த ஆண்டின் அதிக எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகும்
Leave a Reply
You must be logged in to post a comment.