7வது ஐ.பி.எல் போட்டிகள் முதல் கட்டமாக ஐக்கிய அரபு நாடுகளில் நடந்து முடிந்துவிட்டது. தற்போது இரண்டாவது கட்டமாக இன்று முதல் இந்தியாவில் தொடங்க உள்ளது. முதல் போட்டி இன்று ராஞ்சி நகரில் நடக்கின்றது. இதில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றது.
முன்னதாக நடந்த முதல் கட்ட போட்டியில் பஞ்சாப் அணி தான் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. மும்பை அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து இன்னும் புள்ளிகள் பட்டியலில் இடம்பெறவில்லை.
இன்று முதல் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 36 போட்டிகள் அடங்கும். ஜூன் 1ஆம் தேதி மும்பையில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.