புதிய விதிமுறைகள் அறிவிப்பு

இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்படுவதாகவும் இதற்கான புதிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இன்று முதல் திறக்கப்படும் கடைகளில் உள்ள கடை ஊழியர்கள் அடிக்கடி கண், மூக்கு மற்றும் வாய் பகுதியை தொடக்கூடாது

கடை வாசலில் கைகழுவும் வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். காய்ச்சல் இருமல் சளி உள்ள வாடிக்கையாளர்களை ஊழியர்கள் கடைக்குள் அனுமதிக்கக்கூடாது

கடையின் தரைத்தளம் மற்றும் அடிக்கடி போடும் பகுதிகளை தினமும் பத்து முறை சுத்தம் செய்ய வேண்டும் இவ்வாறு தமிழகம் முழுவதும் இன்று முதல் கடைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply