shadow

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் பேச்சுக்கு பிரதமர் மோடி பாராட்டு. சோனியா அதிர்ச்சி

sasitharoorகாங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்துவரும் சசிதரூர், சமீபகாலமாக மோடியின் பல திட்டங்களை தனது டுவிட்டரில் பாராட்டி வருகிறார். இது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நேற்று பிரதமர் நரேந்திரமோடி சசிதரூரை பாராட்டியுள்ளார். இதனால் சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் அதிர்சிச் அடைந்துள்ளனர்.

சமீபத்தில் சசிதரூர்  ஆக்ஸ்போர்ட் யூனியன் சொசைட்டியில் காலனியாதிக்கம் பற்றி பேசிய பேச்சு இந்திய மக்களை வெகுவாக ஈர்த்தது. இவருடைய பேச்சை இணையதளங்களில் லட்சக்கணக்கான வாசகர்கள் பாராட்டியுள்ள நிலையில் பிரதமர் மோடியும் சசிதரூர் பேச்சுக்கு பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கான சபாநாயகரின் ஆய்வு முனைப்பைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசியபோது “சசி தரூரின் பேச்சு தற்போது யூடியூபில் வைரலாகியுள்ளது. நாட்டுப்பற்றுடைய இந்தியர்களின் உணர்வுகளுடன் சசிதரூரின் பேச்சு ஒன்றிப்போயுள்ளது. சரியான விஷயங்களை சரியான இடத்தில் திறமையான வாதங்களை முன்வைப்பதன் மூலம் என்ன மாதிரியான எண்ண அலைகள் ஏற்படும் என்பதை சசிதரூரின் பேச்சு எடுத்துக் காட்டியுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த சசி தரூர், பிரதமர் மோடியின் பாராட்டை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உட்பட பலரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply