குடிமகன் அதிர்ச்சி

சீர்காழி அருகே டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் தவளை ஒன்று மிதந்ததை கண்டு மதுவாங்கிய குடிமகன் அதிர்ச்சி அடைந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கடையில் தென்பாதியை சேர்ந்த ஒருவர் மது பாட்டில் வாங்கி அந்த பாட்டிலை திறந்து பாதி மதுவை கப்பில் ஊற்றிவிட்டு மீண்டும் பாட்டிலை மூடும்போது பாட்டிலின் உள்ளே தவளை ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து மதுபானக் கடைக்கு தகவல் தெரிந்துள்ளதை அடுத்து தவளையுடன் இருந்த மது பாட்டிலை பெற்றுக்கொண்டு உடனே புது மதுபாட்டிலை கடை ஊழியர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.

மதுபாட்டிலில் தவளை கிடந்தது குறித்து நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அம்பிகாபதி கூறியபோது, ‘இதுவரை தங்கள் கவனத்திற்கு தகவல் வரவில்லை என்றும், ஒயின் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யும்போது பரிசோதித்தே விற்பனை செய்ய உத்தரவிடபட்டுள்ளதாகவும், ரம் போன்ற மது வகைகளில், நிறுவனங்களில் இருந்து வரும்போது ஏதேனும் தவறு நடைபெற்றிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply