shadow

‘தெறி’ படத்தின் கேரள உரிமையை வாங்கிய பிரபல நடிகர்-நடிகை
theri-3
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘தெறி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் அனைத்து ஏரியாக்களின் ரிலீஸ் உரிமை பிசினஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை பிரபல நடிகர் ஒருவரும் நடிகை ஒருவரும் இணைந்து பெற்றுள்ளனர்.

கேரளாவில் ‘Friday Film House’ என்ற நிறுவனம் ‘தெறி’ படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை கலைப்புலி எஸ்.தாணுவிடம் இருந்து பெற்றுள்ளது. இந்த நிறுவனம் பிரபல மலையாள நடிகர் விஜய்பாபு மற்றும் நடிகை சாண்ட்ரா தாமஸ் ஆகியோர்களுக்கு உரிமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தாங்கள் நடித்த படங்களையும் சிறிய பட்ஜெட் படங்களையும் மட்டுமே கேரளாவில் ரிலீஸ் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் உள்ள விஜய் படத்தை ரிலீஸ் செய்கின்றனர். விஜய்க்கு கேரளாவில் மிக அதிக அளவில் ரசிகர்கள் இருப்பதால் தாங்கள் தைரியமாக இந்த படத்தை ரிலீஸ் செய்வதாகவும், கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது.

Chennai Today News: Friday Film House bought Theri kerala release rights

Leave a Reply