மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சியில் பங்குபெறுவதற்கான நுழைவுத் தேர்வை சென்னை அண்ணா நகரில் இயங்கி வரும் ஃபோகஸ் அகாதெமி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தி:
அகாதெமி சார்பில் வழங்கப்படும் இலவசப் பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு வருகிற 24-ஆம் தேதி (சனிக்கிழமை) நடத்தப்பட உள்ளது.
பட்டப் படிப்பு முடித்த 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்கலாம். தகுதி பெறும் முதல் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஓராண்டுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், அண்ணா நகரில் உள்ள அலுவலகத்தில் நேரில் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு 9442722537 என்ற கைப்பேசியில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.