சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இன்னும் சில மாதங்களுக்கு மாஸ்க் அணிவது என்பது அனைவருக்கும் கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி தற்போதைக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இலவச முகக்கவசங்கள் நாளை முதல் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

கொரோனா நோய்த்‌ தொற்றில்‌ இருந்து மக்களைப்‌ பாதுகாக்கவும்‌, மேலும்‌ வைரஸ்‌ பரவாமல்‌ தடுக்கவும்‌, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப்‌ பகுதிகளில்‌ வாழும்‌ 26 லட்சம்‌ மக்களுக்கு நாளை முதல்‌ இலவச
முகக்கவசங்கள்‌ வழங்கப்பட உள்ளது.

ஒரு நபருக்கு 2 முகக்கவசம்‌ வீதம்‌ மொத்தம்‌ 52 லட்சம்‌ முகக்கவசங்கள்‌ விநியோகம்‌ செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகக்கவசத்தின்‌ முக்கியத்துவம்‌ உணர்ந்து அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிந்து உங்களையும்‌ சுற்றாரையும்‌ நோய்த்‌ தொற்றில்‌ இருந்து பாதுகாத்துக்‌ கொள்ள வேண்டும்‌.

இவ்வாறு சென்னை மாநகராட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply