shadow

ஓபிஎஸ் உடன் முன்னாள் டிஜிபி திலகவதி சந்திப்பு. ஆர்.கே.நகர் வேட்பாளரா?

சசிகலா குடும்பத்தினர்களிடம் இருந்து அதிமுகவை கைப்பற்ற தனி அணியாக களம் இறங்கியுள்ள ஓபிஎஸ் அவர்கள் முதல்வராக இருந்தபோதும், முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின்னரும் தொண்டர்கள் முதல் அதிகாரிகள் வரை அவருக்கு தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கின்றனர்.

ஓபிஎஸ் அவர்களுக்கு 11 எம்.எல்.ஏக்கள், 12 எம்பிக்கள் உள்பட பல அரசு அதிகாரிகளும் ஆதரவு தந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு ஓய்வு பெற்ற டி.ஜி.பி. திலகவதி, ஓ.பன்னீர்செல்வத்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்ததாகவும் இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஆர்.கே. நகரில் ஓபிஎஸ் அணியின் சார்பில் திலகவதி வேட்பாளராக அறிவிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முன்னாள் காவல்துறை அதிகாரியும் மயிலாப்பூர் எம்.எல்.ஏவுமான நட்ராஜ் ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் நிலையில் இன்னொரு முன்னாள் காவல்துறை அதிகாரி ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply