டெல்லி மருத்துவமனையில் அருண்ஜெட்லி அனுமதி: பிரதமர் விரைவு
முன்னாள் நிதியமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாக இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
அருண் ஜெட்லி உடல் நலம் குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்குள்ள மருத்துவர்களிடம் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அருண் ஜெட்லி விரைவில் பூரண உடல் நலத்துடன் திரும்ப அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
முன்னதாக அருண் ஜெட்லியின் ராஜ்யசபா எம்பி பதவி காலம் கடந்த மே மாதம் முடிவடைந்த நிலையில் புதிதாக அமைந்த நரேந்திர மோடியின் பாஜக அரசில் அவர் தனக்கு எந்தவிதமான பதவியும் தேவையில்லை என்றும், தனது உடல் நலத்தை கருத்தில் கொண்டு தான் முழு ஓய்வு எடுக்க உள்ளதாகவும் பிரதமர் மோடியிடம் அவர் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பாஜகவின் மூத்த தலைவர்களான ஷீலா தீட்சித் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய இரண்டு தலைவர்கள் சமீபத்தில் காலமானதால் பாஜக தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.