shadow

JaswantSingh-ptiவாஜ்பாய் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத்துறை போன்ற அமைச்சராக பதவி வகித்த ஜஸ்வந்த் சிங் அவர்களுக்கு திடீரென நேற்று உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அவர்கள் நேற்று இரவு 11 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார். பேச்சு மூச்சில்லாமல் அவர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுயநினைவற்று மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜஸ்வந்த் சிங்கிற்கு தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாக டெல்லியில் இருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply