கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீ: 6 மாத குழந்தை உள்பட 50 பேர் பலி
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகர் அருகில் உள்ள அட்டிகா பிராந்தியத்தில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக கடற்கரையை ஒட்டியுள்ள வனப்பகுதி பயங்கரமாக எரிந்து கொண்டிருக்கின்றது. இந்த தீயில் இதுவரை 50 பேர் பலியாகியுள்ளதாகவும் அதில் 6 மாத குழந்தையும் ஒன்று என தகவல்கள் வெளிவந்துள்ளது.
காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதியை ஒட்டியுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சாம்பலாகிவிட்டதாகவும், வனப்பகுதி வழியாக கார்களில் சென்ற பயணிகளும் தீயில் சிக்கிக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறபடுகிறது.
காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க மீட்புப்ணிகள் நடைபெற்று வருவதாகவும், தீயில் சிக்கியவர்களை நெருங்க முடியாத அளவுக்கு தீயின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுக்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.