shadow

காவிரியில் வெள்ளம்: குமாரபாளையம் வீடுகளில் புகுந்த வெள்ள நீர்

காவிரியில் இருந்து வினாடிக்கு சுமார் 80ஆயிரம் கன அடி திறந்துவிடப்படுவதால் காவிரியின் கரையோரம் இருக்கும் மக்களுக்கு ஏற்கனவே வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியான இந்திரா நகர் என்ற பகுதியில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததாகவும், அந்த வீடுகளில் இருந்த 38 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply