ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 747 ஜம்போ ஏஐ 964 என்ற விமானம், நேற்று சவுதி அரேபியா ஜெட்டா நகரிலிருந்து புறப்பட்டு ஐதரபாத் வழியாக மும்பைக்கு வர இருந்தது.

புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 400 பயணிகளுடன் நடுவானில் பறந்துகொண்டிருந்த அந்த விமானத்தின் ஒரு கதவு சரியாக மூடப்படாதது குறித்து விமானி அறையின் கருவி எச்சரித்தது. இதையறிந்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர்.

இதனால் உடனடியாக மீண்டும் ஜெட்டா நகர விமானநிலையத்திற்கு அந்த விமானம் கொண்டுசெல்லப்பட்டு கதவு சரி செய்யப்பட்டப்பிறகு மீண்டும் மும்பைக்கு புறப்பட்டது.

இதனால் விமானம் ஐதராபாத்திற்கு செல்லாமல் நேராக மும்பைக்கு பத்திரமாக வந்து இறங்கியது. பின்னர் ஐதராபாத் பயணிகள் மற்றொரு விமானத்தின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Leave a Reply