shadow

பர்தா அணியாத 5 பெண்களை பொதுமக்கள் முன் கல்லால் அடித்து கொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்

isisiமுகத்தை மறைத்து பர்தா அணியாத  பெண்களை மிகக் கொடூரமாக கல்லால் அடித்து கொலை செய்து வெறிச்செயலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியா நாடுகளை மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் தீவிரவாத செயல்களை செய்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ், தாங்கள் கைப்பற்றிய சில நாடுகளை இஸ்லாமிய நாடாக அறிவித்து அங்கு கடுமையான சட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுபாட்டில் இருக்கும் நகரங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடுமையான தண்டனைகளை நிறைவேற்றி வருவதாக குர்தீஷ் இனத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர் தெரிவித்து உள்ளதாக ஈராக் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.

கடந்த ஒரு மாததிற்கு முன், ஒரு பெண் திருமணத்தின் போது கன்னியாக இல்லை என்பது தெரிய வந்ததால், அந்த பெண்ணை நடுரோட்டில் நிற்க வைத்து கல்லால் அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத நிலையில்  ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மொசூல் நகரில் உள்ள கிலானி முகாமில், 5 பெண்கள் முகத்தை மறைக்க பர்தா அணியவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை கொடுத்துள்ளனர். அந்த 5 பெண்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கல்லால் பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்து கொலை செய்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply