மேலும் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே 124 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது மேலும் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் கன்னியாகுமரியை சேர்ந்த 35 வது நபர் ஒருவருக்கும் 25 வயது இளைஞர் ஒருவருக்கும், 61 வயது நபர் சென்னை பிராட்வேயை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இவர்கள் மூவரும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அதேபோல் திருவான்மியூரை சேர்ந்த 85 வயது நபர் ஒருவருக்கும், ஓஎம்ஆர் சாலையில் உள்ள கழிப்பட்டூர் என்ற பகுதியைச் சேர்ந்த 54 வயது நபர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

Leave a Reply