இலங்கையில் ரப்பர் தொழிற்சாலையில் பயங்கரா விபத்து:
இலங்கையில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் உள்ள அம்மோனியா டேங்கை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 5 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன
.இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ஹொரானா என்ற நகரில் செயல்பட்டு வரும் ரப்பர் தொழிற்சாலையில் அம்மோனியா வாயுவை சேகரித்து வைக்கும் தொட்டி உள்ளது.
இந்த தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர் ஒருவர் நேற்று ஈடுபட்டபோது திடீரென எதிர்பாராத வகையில் விஷவாயு தாக்கி அவர் மயங்கி விழுந்தார்.
இதனைகண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க தொட்டியின் உள்ளே இறங்கினர். இதில் விஷவாயு தாக்கி அவர்களும் பரிதாபமாக இறந்தனர்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இறந்தவர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விஷவாயு தாக்கியதில் மயங்கி கிடந்த 10க்கு மேற்பட்டவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.