இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 69 பேர் இன்று காரைக்கால் வந்தடைந்தனர்.
இலங்கை சிறையில் இருந்து கடந்த 18 மற்றும் 22ஆம் தேதிகளில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் தங்கள் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளுடன் இன்று காலை காரைக்கால் வந்தடைந்தனர். அவர்களை கடலோர காவல்படையினர் பத்திரமாக அழைத்து வந்து கரை சேர்த்தனர். இன்று அதிகாலை காரைக்காலுக்கு வந்த அவர்கள் அதன்பின்னர் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றனர்.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 20 பேர்களை சிறைபிடித்ததாக செய்திகள் கூறுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.