1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்: கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் கடந்த சில நாட்களாக இயங்கவில்லை. இதனால் அனைத்து வகுப்பிற்கும் இன்னும் முழு ஆண்டு தேர்வு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை இந்த ஆண்டு படித்து வரும் அனைத்து மாணவர்களும் பாஸ் என புதுவை கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படித்து வரும் அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற ஒரு அறிவிப்பு தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரிடம் இருந்து வெளிவரவேண்டும் என்பதே அனைத்து மாணவர்களின் விருப்பமாக உள்ளது

Leave a Reply