மேற்கு ஆப்பிரிக்காவின் நாட்டுக்கு சென்ற முதல் இந்தியர்: தமிழர் செய்த சாதனை

இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான பாஜக அரசு தலைமை ஏற்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆட்சியில் தமிழரான ஜெய்சங்கர் என்பவர் மத்திய வெளியுறவு அமைச்சராக பணியாற்றி வருகிறார் என்பது ஏற்கனவே தெரிந்ததே

இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜர் என்ற நாட்டில் உள்ள நியாமே என்ற நகருக்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் உடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நைஜர் நாட்டுக்கு சென்ற முதல் இந்திய வெளியுறவு அமைச்சர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது இந்த சாதனையை ஒரு தமிழர் செய்துள்ளார் என்பது தமிழர்களாகிய அனைவருக்கும் பெருமையாக கருதப்படுகிறது

 

Leave a Reply