இந்தியாவில் கொரோனாவிற்கு முதல் பலி: அதிர்ச்சி தகவல்
ஐதராபாத்தை சேர்ந்த முகமது உசைன் சித்திக் என்ற முதியவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பலியான முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது
76 வயதான முகமது உசைன் சித்திக் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.