shadow

முகேஷ் அம்பானியின் ஆடம்பர பங்களாவில் தீ விபத்து

உலகின் மிக மதிப்பு வாய்ந்த, மிகச்சிறந்த கட்டிடங்களில் ஒன்றான முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஆன்டிலியா என்று அழைக்கப்படும் ஆடம்பர பங்களாவில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பையின் பரபரப்பான பகுதியாகவும், ரெசிடென்சியல் பகுதியாகவும் கருதப்படும் அல்டாமவுன்ட் சாலையில் சுமார் 40 ஆயிரம் சதுர அடியில் முகேஷ் அம்பானியின் சொகுசு பங்களா கட்டப்பட்டுள்ளது. 27 அடுக்குகளே இருந்தாலும் சில மாடிகள் மிக உயரமாகக் கட்டப்பட்டுள்ளன. அதனால், இந்த பங்களா கிட்டத்தட்ட 40 மாடிக் கட்டடத்துக்கு இணையான உயரம் கொண்டது. 3 ஹெலிகாப்டர் தளம், 168 கார் பார்க்கிங், ஸ்நோ ரூம் என பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள

இந்நிலையில் இந்த பங்களாவில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வீட்டில் உள்ள தோட்டம் இருக்கும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குதான் மொபைல் டவர் அமைக்கப்பட்டுள்ளது என்று தீயணைப்பு அதிகாரி பி. எஸ். ரஹாங்டேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் ரஷ்மி கரன்திகர் கூறுகையில், ”வீட்டின் ஆறாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்” என்று கூறினார்

Leave a Reply