shadow

டெல்லி சாஸ்திரி பவனில் திடீர் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்

இந்தியாவில் அரசு அலுவலகங்களில் உள்ள முக்கிய கோப்புகள் திடீர் திடீரென காணாமல் போகும், அல்லது முக்கிய கோப்புகள் அடங்கிய அலுவலகம் திடீரென தீப்பிடித்து அந்த ஆவணங்கள் தீயில் கருகும். இது பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் இன்று டெல்லி சாஸ்திரி பவனில் தீப்பிடித்தது. இந்த் தீவிபத்தில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் சாம்பலாகியதாக கூறப்படுகிறது.

இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைத்தன.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மேலும் இதனால் பொருள் சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதை குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை .

Leave a Reply