கமல் வீட்டில் தீ விபத்து. நூலிழையில் உயிர் தப்பினார்
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் நேற்றிரவு நேற்றிரவு நடந்த தீ விபத்து ஒன்றுக் கமல்ஹாசன் நூலிழையில் உயிர்தப்பினார்
சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள கமல்ஹாசன் வீட்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவரது வீட்டின் 3வது மாடியில் இருந்த பிரிட்ஜ் அதிக வெப்பம் அடைந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட அதிக புகை ஏற்பட்டதாகவும், புகையில் சிக்கியிருந்த கமல்ஹாசனை அவரது ஊழியர்கள் காப்பாற்றியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தீ விபத்தில் கமல்ஹாசன் பாதுகாத்து வைத்திருந்த பல அரிய புத்தகங்கள் சாம்பலாகியது என்பது வருத்தத்திற்குரிய செய்தி.
இந்த விபத்து குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: “என் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. நான் பாதுகாப்பாக இருக்கிறேன். உறங்க செல்கிறேன். உதவிய பணியாளர்களுக்கும், அக்கறையுடன் விசாரித்தவர்களுக்கும் நன்றி. “என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.