shadow

ரூபாய் நோட்டை மாற்றும் கடைசி நாளில் சென்னை எஸ்பிஐ வங்கியில் தீவிபத்து

பாரத பிரதமர் நரேந்திரமோடி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ஆம் தேதி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள்

இந்நிலையில் இதுவரை செல்லாத நோட்டுக்களை மாற்றாதவர்கள் இன்று வங்கியின் முன் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் எதிரே உள்ள எஸ்.பி.ஐ. வங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து வருகின்றனர்.

Leave a Reply