சர்தார் சிலையை 30,000 கோடிக்கு விற்க ஆன்லைனில் விளம்பரம்: அதிர்ச்சியில் போலீசார்
சமீபத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலையை திறந்து வைத்தார் என்பதும் உலகிலேயே மிக உயரமான இந்த சிலை இந்தியாவின் பெருமையை கூறும் வகையில் இருந்தது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த சிலை விற்கப்பட இருப்பதாகவும் அதன் விலை முப்பதாயிரம் கோடி என்றும் ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்பட்டது
இதனை அடுத்து குஜராத் போலீசார் அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
அரசுக்கு சொந்தமான ஒரு சிலையை 30,000 கோடிக்கு விற்பனை செய்ய இருப்பதாக ஆன்லைனில் விளம்பரம் வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.