shadow
மெர்சலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் தீபா
அரசியலில் மட்டுமின்றி அனைத்து விஷயங்களிலும் தீபா மெதுவாக செயல்படுகிறார் என்பதற்கு உதாரணம் தற்போது அவர் மெர்சலுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததை அனைவரும் குறிப்பிடுகின்றனர்.
விஜய்யின் ‘மெர்சல்’ பட பிரச்சனை கடந்த ஒரு வாரமாக தேசிய அளவில் டிரெண்டாகி தற்போதுதான் ஓய்ந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் அனைத்து தேசிய, மாநில தலைவர்கள் கருத்து கூறி ஓய்ந்துவிட்ட நிலையில் இன்று தீபா, மெர்சலுக்காக குரல் கொடுத்துள்ளார் 
இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தீபா , மெர்சலில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு முறைகேடான செயல் என்றும் கருத்து சுதந்திரத்தை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply