shadow

அலங்காநல்லூருக்கு வாங்க. பீட்டா தலைவருக்கு திரைப்பட பாடலாசிரியர் நக்கலான அழைப்பு

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விட மாட்டோம் என்று மார்தட்டிய பீட்டா அமைப்பின் முயற்சியை தமிழகத்தின் மாணவர்களின் எழுச்சியால் அவசர சட்டம் இயற்றப்பட்டு ,தற்போது பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பிரபல திரைப்பட பாடலசிரியர் பழநிபாரதி, பீட்டா இந்தியா அமைப்பின் தலைவர் பூர்வா ஜோஷிபுராவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் ‘வெளிப்படையாக சவால் விடும் பூர்வா ஜோஷிபுராவிற்கு வெளிப்படையாக சவால் விடுகிறேன்… ஜல்லிக்கட்டை நடத்தவே முடியாது” என கூறிவரும் பீட்டா பூர்வா ஜோஷிபுரா எங்கு இருந்தாலும் அலங்காநல்லூர் வாடிவாசலுக்கு வரவும்…! என கிண்டலான பதிவை பதிவு செய்துள்ளார்.

பழநிபாரதியின் இந்த பதிவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும், ஷேர்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply