தெலுங்கில் வி.எஸ்.பாணி என்ற இயக்குனர் 24/லவ் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வி.எஸ்.பாணி இயக்கி வரும் “24/லவ்” என்ற திரைப்படத்தில் நடிகை சோனாலி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே பலமுறை நடிகை சோனாலிக்கு இயக்குனர் பாணி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது ஒரு கட்டத்தில் சோனாலியின் வீட்டுக்கு பட்டப்பகலில் வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தபோது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இயக்குனரை அடித்து விரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் நடிகை சோனாலி பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலையத்தில் இயக்குனர் மீது புகார் கொடுத்துள்ளார். மேலும் தனக்கு நீதி கிடைக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.