இந்திய ராணுவ ஆபீஸர்கள் மற்றும் ஜவான்களுக்கு இடையே குத்துச் சண்டை போட்டி நடைபெற்றது.

இந்த விளையாட்டில் உப்புப் பெறாத விஷயத்திற்கு தகராறு ஏற்பட்டு பெரும் குழப்பம், அடிதடியில் வந்து முடிந்துள்ளது. இது இந்திய ராணுவத்திற்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனரல் பிக்ரம் சிங் ரெஜிமெண்டில் உள்ள வீரர்களுக்கும் ஆபீசர்களுக்கும் இடையே இந்த அசிங்கமான சண்டை நிகழ்ந்துள்ளது.

இந்த தகராறில் இரண்டு ஜவான்கள் ஒரு ஆபீசர் கடும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
என்ன நடந்தது என்று தெரியவில்லை ஆனால் ஆத்திரமடைந்த ஜவான்கள் ஆபீசர்களை ஓட ஓட விரட்டியடித்துள்ளனர். என்று தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கிறது.
இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply