அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் இரண்டு வயது மகளை நீச்சல் குளத்தில் தூக்கியெறிந்த கல்மனது கொண்ட தந்தை ஒருவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அரிசோனா மாகாணத்தை சேர்ந்த கோரி மெக்கர்த்தி என்பவர் தனது இரண்டு வயது குழந்தை மற்றும் நாய்க்குட்டியுடன் நீச்சல் குளத்திற்கு சென்றார். நாய்க்குட்டியுடன் விளையாடிகொண்டிருந்த குழந்தை திடீரென நாய்க்குட்டியை தூக்கி நீச்சல் குளத்தில் போட்டது. இதனால் நாய்க்குட்டி சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.
இதனால் ஆத்திரமுற்ற கோரி மெக்கர்த்தி, தனது மகள் என்றும் பாராமல் மகளை தூக்கி நீச்சல் குளத்தில் எறிந்தார். இதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணி, குழந்தையை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தார்.
இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்த போலீஸார், குழந்தையின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். நாய்க்குட்டியை கொன்ற குழந்தைக்கு பாடம் புகட்டவே தான் குழந்தையை தூக்கி எறிந்ததாக கோரி கூறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தையின் தாயார் கடும் அதிர்ச்சி அடைந்ததுடன், கல்மனது கொண்ட கணவனுக்கு கடும் தண்டனை அளிக்கும்படி போலீஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/ROenHG” standard=”//www.youtube.com/v/v01YVR7DYZY?fs=1″ vars=”ytid=v01YVR7DYZY&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3746″ /]
Leave a Reply
You must be logged in to post a comment.