shadow

தேசியகீதம் ஒலித்த போது செல்போனில் பேசிய முன்னாள் முதல்வர்

farooqமேற்கு வங்க மாநில முதல்வராக மம்தா பானர்ஜி மீண்டும் நேற்று பதவியேற்றார். இந்த விழாவின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது முன்னாள் காஷ்மீர் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக வெளியான வீடியோ ஒன்றினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. மேற்கு வங்க முதல்வராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

இந்த பதவியேற்பு விழாவில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, தேசிய கீதம் இசைக்கப்படும்போது செல்போனில் பேசுவது போன்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply