shadow

ரஜினி-ரசிகர்கள் சந்திப்பு திடீர் ரத்து

ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வதாக திட்டிமிட்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த திட்டத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.

ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, ஏப்ரல் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை சென்னை ஸ்ரீராகவேந்திர மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்திருந்தார். இதை அவர் தயாரிப்பாளர் சங்க தேர்தலின்போது செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒரு நாளைக்கு 2000 பேர்களுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள ரஜினிகாந்த் முடிவு செய்திருந்த நிலையில் தற்போது இது நடைமுறையில் சாத்தியமில்லை என்று இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளார். ஆனாலும் இந்த திட்டத்திற்கு மாற்றாக மிக விரைவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் இந்த சந்திப்புக்கான புதிய தேதியை விரைவில் அறிவிக்கப் போவதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Leave a Reply