விரைவில் அறிமுகமாகிறது ஃபேஸ்புக் பிரவுஸர்
உலகிலேயே அதிக வாடிக்கையாளர்களை கொண்டு நம்பர் ஒன் அந்தஸ்தில் இருக்கும் ஃபேஸ்புக், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை செய்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் ஃபேஸ்புக் பிரவுசர் விரைவில் அறிமுகமாகவுள்ளதாகவும், இதன் காரணமாக இண்டர்நெட்டில் இருக்கும் வாடிக்கையாளர்களை 24மணி நேரமும் ஃபேஸ்புக் கட்டிப்போட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது இருக்கும் வசதிகளின்படி, நாம் பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தி கொண்டிடே வெவ்வேறு இணையதளங்களுக்குள் நுழைந்து இதர தேடல்களில் ஈடுபட முடியாது. அதற்கென மொஸில்லா அல்லது குரோம் பிரவுசரை பயன்படுத்த வேண்டும். இந்தக் குறையைப் போக்க பேஸ்புக் இணையதளத்தின் மூலமாகவே இணையங்கள் சார்ந்த அனைத்து தேடல்களுக்கும் நம்மை அழைத்துச் செல்லும் வகையில் பேஸ்புக் நிறுவனம் இந்த புதிய பிரவுஸர் ஆப் உருவாக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இதனால் ஃபேஸ்புக்கில் இருப்பவர்கள் எளிதாக இண்டர்நெட்டில் உள்ள அனைத்து தேடல்களையும் தேடும் வசதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.