ஃபேஸ்புக்கில் புகைப்படம் வெளியானதால் தந்தை-மகள் தற்கொலை: விஷமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
ஃபேஸ்புக்கில் தந்தையும் மகளும் ஆபாசமாக இருப்பது போன்று விஷமிகள் சிலர் புகைப்படங்களை வெளியிட்டதால் சம்பந்தப்பட்ட இருவரும் மனமொடிந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள கவுடாநபாவி கிராமத்தை சேர்ந்த ரமணகவுடா(55) மற்றும் அவரது மகள் பசலிங்கம்மா(20) ஆகியோர் இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்களை சில விஷமிகள் சமீபத்தில் பேஸ்புக்கில் வெளியிட்டனர்.
இதனால் மனமுடைந்த ரமணகவுடாவும் பசலிங்கம்மாவும் இன்று தற்கொலை செய்து கொண்டதாக பலகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பசலிங்கம்மா விஷம் அருந்தியும், ரமணகவுடா தூக்கிட்டும் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர்
Leave a Reply
You must be logged in to post a comment.