shadow

கருணாநிதி முன்னிலையில் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்.

ilangovanதிமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூரில் கருணாநிதி முன்னிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதால் நள்ளிரவு முதல் இளங்கோவனின் உருவப்பொம்மை எரிப்பது உள்பட பல்வேறு போராட்டங்களில் அதிமுகவினர் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியே பரபரப்பில் உள்ளது.

நேற்று இரவு திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் முன்னிலையில் இளங்கோவன் பேசிய அருவருக்கத்தக்க பேச்சு மேடையில் இருந்த தலைவர்களையே முகம் சுழிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இளங்கோவனின் சர்ச்சைப்பேச்சு அதிமுகவினர்களை ஆத்திரமடைய வைத்தது. இதனால் திருவாரூர் பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான அதிமுகவினர் திரண்டு இளங்கோவன் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவரது உருவ பொம்மையையும் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுகவினர் இளங்கோவன் உருவபொம்மையை எரிப்பதை கேள்விப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பதிலடியாக திருவாரூர் பேருந்து நிலையத்தில் திரண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அதிமுகவினர் காவல்துறையினர்களை வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply