தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கார்த்திக் ப.சிதம்பரத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 22ஆம் தேதி கார்த்திக் சிதம்பர்ம் கூட்டிய காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் குறித்து விமர்சனம் செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே கட்சியின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் கூட்டம் நடத்திய கார்த்திக் சிதம்பரத்தை ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்பதற்கு வரும் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் இந்த எச்சரிக்கை கடிதம் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விரைவில் ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.