shadow

ilangovanதமிழகத்தில் வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் தமாகா என்ற கட்சியே இருக்காது’ என்றும் அக்கட்சி  நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த சிறுகாளான் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

திருச்செந்தூர் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கே.டி.கோசல்ராம் மற்றும் ஏ.பி.சி.வீரபாகு ஆகியோரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள  தூத்துக்குடிக்கு வ்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அங்கு நடைபெற்ற விழா ஒன்றில் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. மதுரை மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜெ.சாருகேசி வெளியிட்ட இந்த தபால் உறையை ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியே இருக்காது. அக்கட்சி நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த சிறுகாளான். கடந்த 4 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கு கூட எந்த திட்டத்தையும் செயல்படுத் தவில்லை. தொழில்துறையில் தமிழகம் மிகப்பெரும் பின்னடவை சந்தித்திருக்கிறது.

தமிழகத்தில் தொழில் தொடங்க அந்நிய முதலீட்டாளர்கள் தயங்குகிறார்கள். மத்தியில் கடந்த ஓராண்டுகால பாஜக ஆட்சியில் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. ஆனால் பிரதமர் மோடி 20 முறை வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார்.

பெட்ரோல், டீசல் விலையை பலமுறை உயர்த்தியிருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த விலை உயர்வு வந்தபோதெல்லாம் பெரிதாக குற்றம்சாட்டினர்’ என்று கூறினார்.

Leave a Reply