shadow

தீபாவே அரசியலுக்கு வரும்போது கமல்ஹாசன் வரக்கூடாதா? நல்லக்கண்ணு

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒரே அடையாளம் மட்டுமே உள்ள தீபாவே அரசியலுக்கு வரும்போது, கமல்ஹாசன் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்று முத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, ‘அரசியல் என்பது யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி கூட அரசியிலுக்கு வர நினைத்தார். வரட்டுமே…முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு எல்லாரும் முதலமைச்சர்ன்னு போட்டுக்கிறாங்க.

தீபா கூட முதலமைச்சரா வரனும்னு ஆசைப்பட்டாங்க. அது அவங்க இஷ்டம். அதனால் கமல் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு எப்படி சொல்ல முடியும். அவரும் வரலாம். என நல்லகண்ணு தெரிவித்துள்ளார்

கமல்ஹாசனுக்கு மூத்த அரசியல்வாதி நல்லக்கண்ணு அவர்களே ஆதரவு கொடுத்துள்ளதால் கமல்ஹாசன் தரப்பினர் உற்சாகமாக உள்ளனர்.

Leave a Reply