விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான நடிகை நமீதா அதன்பின்னர் ஏய், இங்கிலீஷ்காரன், சாணக்யா, ஆணை, பில்லா போன்ற பல படங்களில் நடித்தார்.தற்போது படங்களில் அதிகளவு நடிக்காவிட்டாலும், கடை திறப்பு விழா, தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ மற்றும் திருவிழாக்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டு நல்ல வருமானத்தை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சூரத் நகரில் நடைபெற உள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அந்த நிகழ்ச்சியின் மேனேஜர் ஒருவர் அட்வான்ஸ் கொடுத்து நமீதாவை புக் செய்தார். இந்நிலையில் நமீதாவுக்கு சேரவேண்டிய மீதித்தொகையுடன் அந்த மேனேஜர் தலைமறைவாகிவிட்டதாகவும், அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்கள் கூறுகின்றன.
மோசடி செய்த மேனேஜரை போலீஸார் தேடி வரும் நிலையில் நமீதா இனிமேல் இதுபோன்ற விழாக்களில் ஒப்பந்தம் செய்யப்படும்போது கவனமாக இருக்கவுள்ளதாக அவரது வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.