shadow

எடப்பாடி அணி செய்ய வேண்டியது நாலே நாலு வரி கடிதம். எல்லா குழப்பங்களும் ஓடிவிடும். மாபா பாண்டியராஜன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசை கவிழ்க்க தினகரன் தனி அணி ஏற்படுத்தி அதில் தனது ஆதரவாளர்களை இழுத்து வருகிறார். இதனால் அதிமுக மூன்றாக உடைந்தது மட்டுமின்றி ஆட்சி கவிழும் ஆபத்தும் உண்டாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த குழப்பங்களுக்கு ஒரு சிறு கடிதம் மூலம் முழு தீர்வு பெறலாம் என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கருத்து கூறியுள்ளார். சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என்று நாங்கள் ஏற்கனவே தேர்தல் கமிஷனிடம் புகார் மனு கொடுத்துள்ளோம்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, எங்களுடைய புகார் மனுவுக்கு ஆதரவு தருவதாகவும், சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் நாலே வரி கடிதம் எழுதினால் உடனடியாக தேர்தல் ஆணையம் நாளையே சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்துவிடும். சசிகலாவின் நியமனமே ரத்தாகிவிட்டால் அவர் நியமனம் செய்த துணைப்பொதுசெயலாளர் பதவியும் ரத்தாகிவிடும். முதல்வர் பழனிச்சாமி அணியினர் இதை செய்வார்களா? என்று மாபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply