அதிமுகவில் இருந்து சசிகலா-தினகரன் நீக்கம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டம் ஒன்று சற்றுமுன் நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் அதிமுக அம்மா அணியில் இருந்து சசிகலா மற்றும் தினகரன் அதிரடியாக நீக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவின் நிர்வாகிகளையும், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளையும் அதிரடியாக மாற்றிய தினகரனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் முதல்வர் தரப்பில் இருந்து இந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இந்த அதிரடி இணைப்புக்கு முக்கிய காரணமாக ஓபிஎஸ் அணி இணைப்பு பேச்சுவார்த்தை முடிவு பெற்றதும் ஒன்று என்று கூறப்படுகிறது. இரு அணிகளும் இணைந்துவிட்டால் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி, தினகரனின் துணை பொதுச்செயலாளர் பதவி ஆகியவை தானாகவே காலியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.